An elephant from the Western Ghats entered Narasipuram near Thondamuthur in Coimbatore. The roaming elephant, in search of food and water, caused panic among villagers who fled to safety.
கோவை: கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை வனப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் யானைகள் அடிக்கடி உணவு , தண்ணீர் தேடி ஊருக்குள் உலா வருவது தொடர் கதையாகி விட்டது. இடம் பெயர்வு , என பல்வேறு காரணங்களுக்காக உலா வருகின்றன. அந்த வகையில் தொண்டாமுத்தூர் அடுத்த நரசீபுரம் பகுதியில உள்ள வெள்ளிமலைப்பட்டினத்தில் காட்டுயானை ஒன்றை காலையிலேயே ஊருக்குள் வந்தது. இதனால் ஊர் மக்கள் யானையிடம் இருந்து தப்பிக்க ஓடினார்கள். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
~ED.72~